Monday, December 26, 2022

33- டி கே ராமமூர்த்தி




 1922 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் நாள் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர் ராமமூர்த்தி .

வயலின் இசைக் கலைஞர்.

எம் எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து 1952 முதல் 700 படங்களுக்கு மேல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பெயரில் இசையமைத்துள்ளனர் .

1966ல் விஸ்வநாதனிடம் இருந்து பிரிந்தவர் தனியாக 19 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் இசையில் வெளி வந்துள்ள தமிழ்த்திரைப்படங்கள்

-------------------------------------------------------

1966  - சாதுமிரண்டால் (அருள்வாயே நீ அருள்வாயே,ஏ ஃபார் ஆப்பிள்) 

            தேன் மழை (விழியால் காதல் கடிதம்,கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா)

             மறக்கமுடியுமா (காகித ஓடம் கடல் அலை மேலே,வசந்த காலம் வருமோ)

           மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி (எங்கே பயணம் எங்கே,ஹலோ மை ஃபிரண்ட் நெஞ்சத்தில் என்ன)

1967 - நான் (றாஜா கண்ணு போகாதடி,அதே முகம் அதே குணம்.போதுமோ இந்த இடம்,அம்மனோ சாமியோ,வந்தால் என்னோடு)

           எங்களுக்கும் காலம் வரும்

          பட்டத்து ராணி

          ஆலயம்

1968 - மூன்றெழுத்து (ஆடு பார்க்கலாம் ஆடு)

            நீலகிரி எக்ஸ்பிரஸ்

          சோப்பு சீப்பு கண்ணாடி

1969 - தங்கச்சுரங்கம்

1970- காதல்ஜோதி (உன்மேல கொண்ட ஆசை,சாட்டை கையில் கொண்டு)

          சங்கமம் (ஒரு பாட்டுக்கு பல ராகம்,தன்னந்தனியாக நீ வந்த போது)

1972-  சக்திலீலை

1973- பிரார்த்தனை

1975- அவளுக்கு ஆயிரம் கண்கள்

1984- அந்த 16 ஜூன்

1986- இவள் ஒரு பௌர்ணமி

     

Friday, December 23, 2022

31 -பரணி




 1971  ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் 6ஆம் நாள் தஞ்சை மாவட்டம் அரந்தவரம் எனும் ஊரில் பிறந்தவர் பரணி.இயற்பெயர் குணசேகரன்.விஜய் நடித்த "நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார் பின் 1999ல்  எஸ் ஏ சந்திரசேகரால் "பெரியண்ணா" என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

இவர் இசையில் வந்துள்ள தமிழ்ப்படங்கள்

--------------------------------------

1999 - பெரியண்ணா

2001-பார்வை இன்றே போதுமே

2002 சார்லி சாப்ளின்

பேசாத கண்ணும் பேசுமே

சுந்திரா டிராவல்ஸ்

ஜெயா

முத்தம்

ஸ்டைல்

2992- சிந்தாமல் சிதறாமல்

2004- மீசை மாதவன்

2005- காற்று உள்ளவரை

திருடிய இதயத்தை

அலையாடிக்கூத்து

2006- ஒரு காதல் செய்வீர்

2008- தரகு

2009- ஒரு காதலன் ஒரு காதலி

2010-வெளுத்துக்கட்டு

2011- கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை

வெங்காயம்

2014- சுற்றுலா

2015-வைரன்

2017- ஒண்டிக்கட்டை

வித்யாசாகர் - 29




 தமிழ், மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிப்படங்களுக்கு இசை அமைத்தவர் வித்யாசாகர்.

1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் நாள் விஜயநகரத்தில் பிறந்தார்.

மேற்கத்திய  இசைக்கருவிகளை கையாளும் திறமையையுடைய மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றார்.

இவர் இசையமைப்பில் வந்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்

------------------------------------------

1989

பூ மணம்

சீதா

நிலாப்பெண்ணே

1994- ஜெய்ஹிந்த்

1995 கர்ணா

மிஸ்டர் மெட்ராஸ்

வில்லாதி வில்லன்

ஆயுத பூஜை

முறைமாமன்

பசும்பொன்

1996- பிரியம்

கோயம்பத்தூர் மாப்பிள்ளை

சுபாஷ்

செங்கோட்டை

டாடாபிர்லா

முஸ்தஃபா

நேதாஜி

1997 புதையல்

ஆஹா என்ன பொருத்தம்

ஸ்மைல் பிளீஸ்

1998 உயிரோடு உயிராக

தாயின் மணிக்கொடி

நிலவே வா

1999 

சுயம்வரம்

எதிரும் புதிரும்

பூப்பறிக்க வருகிறோம்

2000 

சிநேகிதியே

புரட்சிக்காரன்

2001

 தில்

அள்ளித்தந்த வானம்

தவசி

வேதம்

பூவெல்லாம் உன் வாசம்

சிநேகம்

2002

வில்லன்

ரன்

கார்மேகம்

2003

தூள்

அன்பே சிவம்

அன்பு

காதல் கிசு கிசு

பல்லவன்

வெல்டன்

பார்த்திபன் கனவு

பவர் ஆஃப் வுமன்

இயற்கை

ஆஹா எத்தனை அழகு

தித்திக்குதே

திருமலை

அலை

ஜூட்

2004

வர்ணஜாலம்

தென்றல் 

கில்லி

மதுர

சதுரங்கம்

2005

லண்டன்

பொன்னியின் செல்வன்

மஜா

2006

ஆதி

பரமசிவன்

தம்பி

பொய்

எம் மகன்

பாசக்கிளிகள்

சிவப்பதிகாரம்

2007

பெரியார்

மொழி

2008

குருவி

பிரிவோம் சந்திப்போம்

ஜெயம்கொண்டான்

அபியும் நானும்

அலிபாபா

மகேசு,சரண்யா மற்ரும் பலர்

ராமன் தேடிய சீதை

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு

அறைஎண் 305 கடவுள்

2009

கண்டேன் காதலை

பேராண்மை

இளமை இதோ இதோ

2003ஆம் ஆண்டு மட்டும் இவர் இசையமைப்பில் 14 படங்கள் வெளிவந்தன. 




Friday, December 16, 2022

22 -எஸ் பாலசந்தர்


 


சுந்தரம் பாலசந்தர் என்ற எஸ் பாலசந்தர் தஞ்சாவூர் ராவ் சாஹேப்வைத்தியநாதன் பேரனும்,சுந்தரம் மகனும் ஆவார்.நன்னிலம் ஸ்ரீவாஞ்சிய கிராமம் பூர்வீகமாகும்.

1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் சென்னையில் பிறந்த இவர்,சென்னையில் சட்டப்படிப்பை படித்து முடித்தார்.

தமிழ்த்திரைப்பட்ங்களில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தியவர்.1954ல் இவர் இயக்கிய "அந்தநாள்"என்ற திரைப்படம்பாடல்காட்சிகள் இன்றி இன்றளவும் முன்னோடியாய் இருக்கும் படமாகும்.

தன் ஐந்தாவது வயதிலேயே கர்நாடக இசையில் நாட்டம் கொண்டவராய் இருந்த இவர் கஞ்சிரா பயின்றார்.பல கலைஞர்களுக்கு பக்க வாத்திய இசையில் பங்கு கொண்டார்.பிரபல இசைக்கலைஞர் ராஜம் இவர் சகோதரன் ஆவார்.

வீணை,தபேலா,மிருதங்கம்,ஆர்மோனியம்,புல் புல் தாரா,தில்ரூபா,சித்தார்,ஷெனாய் என அனைத்து இசைகருவிகளையும் ஆசான் இல்லாமல் தானே கற்று தேர்ந்தார்.

1952ல் சாந்தா என்றவரை மணந்த இவருக்கு ராமன் என்ற மகன் உள்ளார்.

இவர் இசையில் வந்த திரைப்படங்கள்

--------------------------------------------

இது நிஜமா (1948)

என் கணவர் (1948)

கைதி (1951)

அவனா இவன் (1962)

பொம்மை (1964) (தத்தி தத்தி நடந்து வரும் தங்கபாப்பா, நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல்கள் சிறப்பு. ஜேசுதாஸ் இப்படத்தில்தான் "நீயும் பொம்மை" பாடல் மூலம் திரைப்பட பாடகராய் அறிமுகம் ஆனார்)

நடு இரவில்(1965)

1951ல் ராஜாம்பாள் என்ற படத்திற்கு எம் எஸ் ஞானமணியுன் இணைந்து இசையமைத்துள்ளார்.


இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ள் இவர் இயக்கத்தில் 10 படங்களுக்கு மேல் வந்துள்ளன.


1990ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பிலாய் நகரில் ஒரு கச்சேரி செய்யப் போனப்போது அமரர் ஆனார் 


Thursday, December 15, 2022

21 - வி குமார்


 


மெல்லிசை சக்கரவர்த்தி எனப்பட்ட குமரேசன் என்ற பெயரையுடைய வி குமார் 1934ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் நாள் பிறந்தவர்.

150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவை இசை இந்திய மற்றும் மேற்கத்தய இசையைக் கலந்து இருக்கும்.

கே பாலசந்தர் அவர்கள் தனது நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இவரை திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார்.

இவர் இசையமைப்பில் வந்துள்ள  சில தமிழ்ப்படங்கள்

---------------------------------------------------------------- 

நீர்க்குமிழி (1965) (ஆடி அடங்கும் வாழ்க்கையடா..பாடல் பிரபலம்) இப்படத்தில் இணை இசையமைப்பாளர் ஏ கே சேகர் என்பவர்.அவர் ஏ ஆர் ரஹ்மானின் தந்தை ஆவார்

நாணல் (1965)

மேஜர் சந்திரகாந்த் (1966) (கல்யாண சாப்பாடு போடவா)

நினைவில் நின்றவள் (1967)

பொம்மலாட்டம் (1968) (வா வாத்தியாரே வூட்டாண்ட)

எதிர் நீச்சல் (1968) (சேதி கேட்டோ, அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா)

ஆயிரம் பொய் (1969)

நிறைகுடம் (1969)

இரு கோடுகள் (புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன்) (1969)

நவக்கிரகம் (1970)

பத்தாம்பசலி (1970)

நூற்றுக்கு நூறு (1971) (உன்னை வாழ்த்தி பாடுகிறேன்)

வெகுளிப்பெண் (1971)

றங்கராட்டினம் (1971)

வெள்ளிவிழா (1973) (காதோடுதான் நன பாடுவேன்)

 

 

Tuesday, December 13, 2022

20 - எஸ்.ராஜேஸ்வர ராவ்


 

எஸ்.ராஜேஸ்வர ராவ் 1022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் ஆந்திராவில் சிவராமபுரம் என்ற ய்ரில் பிறந்தவர் ஆவார்.

இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர்,நடிகர் என் பன்முகத் திறமையுடையவர் ஆவார்.

இவர் தெலுங்கு,தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்லார்.

இவர் இசையில் வந்துள்ள தமிழ்ப்படங்கள்

----------------------------------------

காமதேனு (1941)

மதன காமராஜன் (1941)

மங்கம்மா சபதம் (1943)

நந்தனார் (1942)) (எம் டி பார்த்தசாரதியுடன் இணைந்து)

தாசி அபரஞ்சி ( 1944)

மிஸ் மாலினி (பரூர் எஸ் அனந்தராமனுடன் இணைந்து)

சந்திரலேகா (1948) (எம் டி பார்த்தசாரதியுடன் இணைந்து)

அபூர்வ சகோதரர்கள் (1949) (எம் டி பார்த்தசாரதி,ஆர் வைத்தியநாதபுடன் இணைந்து)

மனம் போல மாங்கல்யம் (1953)

பூங்கோதை (1053)

ஆண்டி பெற்ற செல்வம் (1954)

விப்ர நாராயணா (1954)

குடும்பம் (1954)

மிஸ்ஸியம்மா (1955) (வாராயோ வெண்ணிலாவே,பழகத் தெரிய வேணும், தெரிந்து கொள்ளணும் பெண்ணே,பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ..என அனைத்து பாடல்களும் அருமை)

பிரேமபாசம் (1956) (ஓஹோ வெண்ணிலாவே)

மாதர்குல மாணிக்கம் (1956)

இரு சகோதரிகள் (1957)

மாயாபஜார் (கண்டசாலாவுடன் இணைந்து)

அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) (ஹனுமந்த ராவ் உடன் இணைந்து)

பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958) (எஸ் வி வெங்கட்ராமன் உடன் இணைந்து)

செஞ்சுலட்சுமி (1958)

கடன் வாங்கி கல்யாணம்(1958)

அவள் யார் (1959)

பெற்ற மனம் (1960)

விக்ரமாதித்தன் (1962)

தசாவதாராம் (19700 (கே எஸ் கோபாலகிருஷ்ணன் படம்)


1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாள் அமரர் ஆனார்.  

Thursday, December 8, 2022

16- மாஸ்டர் வேணு

 மாஸ்டர் வேணு என்ற மத்தூரி வேணுகோபால் 1916ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவர் தமிழ்,தெலுங்கு  திரைப்பட இசையமைப்பாளர் ஆவா.

இவர் இசையில் வந்துள்ள தமிழ்ப் படங்கள்

----------------------------------------------

காலம் மாறிப் போச்சு (1956) (ஏரு பூட்டி போவாயே அண்ணே..சின்னண்னே, பட்டணம்தான் போகலாமடி பொம்பளே..)

பெண்ணின் பெருமை (பி என் ராவ்,ராமாராவ் ஆகியோருடன் இணைந்து)

எது நிஜம் (1956)

எங்கள் வீட்டு மகாலட்சுமி (1957) (மண்ணை நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா,ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது)

மஞ்சள் மகிமை (1959) (ஆகாயவீதியில் அழகான வெண்ணிலா,கோடை மறைந்தால் இன்பம் வரும்,மாறாத சோகம்தானோ,மை டியர் மீனா,ஆனது ஆச்சு போனது போச்சு)

ராஜ மகுடம் (1959)

பாக்ய தேவதா  (1959)

பாட்டாளியின் வெற்றி (1960) (எஸ் ராஜேஸ்வர ராவ் அவர்களுடன் இணைந்து)

புதிய பாதை (1960)

கானல் நீர்



37- ஆதித்யன்

 இயற் பெயர் டைட்டஸ்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தவர். இசையமைப்பளர்,பாடகர்,ஓவியர், சமையல் கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர். இவர் ...